ஆப்நகரம்

தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் லைட் எரியுது: அதிர்ச்சியூட்டும் ஆர்.டி.ஐ...!

தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் லைட் எரிவதாக அதிர்ச்சியூட்டும் ஆர்.டி.ஐ தகவல் கிடைத்துள்ளது.

TNN 23 Jul 2017, 1:50 pm
டெல்லி: தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் லைட் எரிவதாக அதிர்ச்சியூட்டும் ஆர்.டி.ஐ தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil vote for coconut but lotus shine says rti
தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் லைட் எரியுது: அதிர்ச்சியூட்டும் ஆர்.டி.ஐ...!


தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக செயல்படுவதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தன. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து, செய்முறை விளக்கம் அளித்தது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

அதில் சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளரின் தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தனர். ஆனால் தாமரை அருகே விளக்கு எரிந்தது. இதனால் தாமரை சின்னத்திற்கு வாக்குப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. தொடர்ந்து சமூக ஆர்வலர் அனில் கால்காலி என்பவர் ஆர்.டி.ஐ சட்டம் மூலம் விவரம் கேட்டார்.

அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நேர்ந்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளது.

Vote for Coconut but Lotus shine says RTI.

அடுத்த செய்தி