ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி: உதவிக்கு வரும் தேர்தல் ஆணையம்!

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்காக வாக்காளர்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 15 Jan 2021, 7:00 pm
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து அவற்றை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அதேசமயம், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்


உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 6 இடங்களில் இத்திட்டம் காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜூலை மாதத்துக்குள் கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு கீழே குறிப்பிட்ட நோய்களுக்கு ஆளானவர்கள் என முதன்மை பட்டியலில் உள்ள 30 கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக் கறி, முட்டைக்கு முழு தடை.. மாநில அரசு அதிரடி!

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதால், 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும், முதியவர்களையும் எளிதில் அடையாளம் கண்டு, தடுப்பூசி போட பரிந்துரைப்பதற்கு ஏதுவாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தகவல்களை பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முறைபடி அனுமதி கோரியது. இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பதோடு, அனைத்து வகையிலும் உதவத் தயார் என்றும் உறுதி அளித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி