ஆப்நகரம்

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்: விமானப்படை மாஜி தளபதி ஆஜர்

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, தலைநகர் தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

TOI Contributor 2 May 2016, 10:54 am
புதுதில்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, தலைநகர் தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.
Samayam Tamil vvip chopper scam ex air force chief sp tyagi appears before cbi
ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்: விமானப்படை மாஜி தளபதி ஆஜர்


மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஏ.டபிள்யூ-101 ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அகஸ்டா வெஸ்லேன்ட் நிறுவனத்துக்கு, மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பெருமளவு லஞ்சப்பணம் கைமாறியதாக தெரிய வந்ததால், ஒப்பந்தம் அப்போதே ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, அகஸ்டா வெஸ்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. பூதாகரமாக எழுந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய விமானப் படை தளபதி எஸ்.பி. தியாகிக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் எஸ்.பி, தியாகி இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பின்னர், இது தொடர்பாக கொடுத்தல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி