ஆப்நகரம்

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இணக்கமாகச் செயல்பட விரும்புகிறோம்: பிரதமர் மோடி

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான விரோதம் குறைந்து, இரு நாடுகளும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

TNN 17 May 2017, 9:15 am
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான விரோதம் குறைந்து, இரு நாடுகளும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil want to see palestine israel co exist peacefully india
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இணக்கமாகச் செயல்பட விரும்புகிறோம்: பிரதமர் மோடி


பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுப் பேசினார். அப்போது, இந்தியா, பாலஸ்தீனம் இடையே, சில முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, அப்பாஸ் உடன் பிரதமர் மோடி சில மணிநேரம் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, சர்வதேச அரசியல் நிலவரம், பாலஸ்தீனம் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, தெரிகிறது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,’’பாலஸ்தீன் வளர்ச்சிக்காக இந்தியா அளப்பரிய பங்களிப்பை செய்துவருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான மோதல் போக்கு குறைந்து, இரு நாடுகளும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்று, இந்தியா விரும்புகிறது. இது இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளின் விருப்பமாகவும் உள்ளது,’’ என குறிப்பிட்டார்.

India reaffirmed its support to Palestine on Tuesday with Prime Minister Narendra Modi telling Palestinian President Mahmoud Abbas that he hoped to "see the realisation of a sovereign, independent, united and viable Palestine, co-existing peacefully with Israel".

அடுத்த செய்தி