ஆப்நகரம்

பெங்களூரு கலவரத்தை பற்றவைத்த தீப்பொறி இதுதான்; அதுவும் அரசியல் ட்விஸ்ட்!

அரசியல் போட்டியாக இருந்த ஒரு விஷயம் மிகப்பெரிய கலவரமாக வெடிப்பதற்கு எப்படி அடித்தளமிட்டுள்ளது என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 14 Aug 2020, 1:11 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் பதிவிட்ட பேஸ்புக் போஸ்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இஸ்லாமியர்களை காயப்படுத்தியதாக கூறி அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதன் பின்னணியில் வெறும் பேஸ்புக் போஸ்ட் மட்டும் தான் இருக்கிறது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா? ஆம். வேறு பல அரசியல் ஆட்டங்களும் உள்ளன. இதுதொடர்பாக காவல்துறை தரப்பு முதல்கட்ட விசாரணையின் மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil Bangalore Violence Reason


அதன்படி, உள்ளூர் எம்.எல்.ஏவான அகந்த சீனிவாசமூர்த்தியின் வளர்ச்சி முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கார்ப்பரேட் முதலாளி ஒருவரின் உதவியுடன் எம்.எல்.ஏவிற்கு பல்வேறு இடையூறுகளை அளித்து வந்துள்ளனர். ஆட்சியாளர்களுடன் எம்.எல்.ஏவிற்கு மோதல் ஏற்படும் வகையிலும், டெண்டர்கள் கை நழுவிச் செல்லும் வகையிலும் மூன்று முன்னாள் அமைச்சர்களும் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏவைக் காணவில்லை என்று காவல் பைரசந்திரா பகுதி முழுவதும் அவரது புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

வேலையில்லை, வருமானமில்லை; வன்முறையை கையிலெடுத்த இளைஞர்கள் - ஷாக் ரிப்போர்ட்!

இதன் பின்னணியில் அந்த மூன்று பேர் தான் இருக்கிறார்களா என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் போஸ்டர் ஒட்டிய மற்றும் விநியோகித்த நபர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில் தான் எம்.எல்.ஏவின் உறவினர் நவீன் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை இட்டுள்ளார். இதனை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு எம்.எல்.ஏவிற்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். சம்பவத்தன்று இரவு 7 மணி வரை நிலைமை சுமூகமாகத் தான் சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது பேஸ்புக் போஸ்ட் போட்ட நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படித்தான் எம்.எல்.ஏவிடமும், போலீசிடமும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் திடீரென மக்களின் போக்கு மாறியது. கொரில்லா தாக்குதலை கையிலெடுத்து போலீசார் மீதே சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு தான் சந்தேகம் எழுவதாக போலீசார் கூறுகின்றனர். கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 19 முக்கிய குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு முன்னாள் அமைச்சருடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

இவர் முன்னாள் அமைச்சருடனும், அவரது அலுவலகத்துடனும் அதிகாரத்தில் இருந்தது முதலே நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளது. இந்த கலவரத்தின் பின்னணியில் முன்னாள் மேயர் மீதும் சந்தேகம் இருப்பதாக போலீசார் தரப்பு கூறுகிறது. அடுத்த மாதம் பெங்களூரு மாநகராட்சியின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இந்த சூழலில் சகாயபுரம் வார்டில் அடுத்த தலைவராக உருவெடுப்பதில் இரண்டு இளம் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி உறவினர் நவீன். மற்றொருவர் இந்திய சோசியல் டெமோகிரேடிக் கட்சியின் முழமில் பாஷா.

கொரில்லா தாக்குதலை கையிலெடுத்த கும்பல் - சற்றும் எதிர்பார்க்காத பெங்களூரு போலீஸ்!

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், அரசியல் போட்டியே இத்தகைய கலவரத்திற்கு காரணமாக இருப்பதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர். இந்தப் பகுதியில் அரசியல் ரீதியாக பல்வேறு குழுவினர் உள்ளனர். எனவே உள்ளூர் எம்.எல்.ஏவை குறிவைத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரியவரும். என்றார். உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் பார்வையில், நவீன் மற்றும் பாஷாவிற்கு இடையிலான அதிகார மோதலே கலவரத்திற்கு காரணம்.

ஒருமுறை நகராட்சி தேர்தலில் நின்று பாஷா தோல்வியடைந்துள்ளார். அதன்பிறகு இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைப் பெற தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் நவீனுக்கு எதிரான பேஸ்புக் போஸ்ட் விஷயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடும் என்று பாஷா மீது சந்தேகம் இருப்பதாக கூறுகின்றனர்.

அடுத்த செய்தி