பாஜக தலைவர் அமித் ஷா வருகையின் போது அவருக்கு எதிராக கோஷம் போட ரூ.10 ஆயிரம் பணம் தருவதாக ஹர்திக் படேல் ஆதரவாளர் நரேந்திர படேலிடம் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்திய மக்களின் செல்வாக்கைப் பெற்றவர் ஹர்திக் படேல். இவர் தனது போராட்டத்தில் தேசக் கொடியை அவமதித்ததாக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. குஜராத் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
இச்சூழலில் ஹர்திக் படேலின் ஆதரவாளர்களாக இருந்த வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இதனிடையே, ஹர்திக்கின் ஆதரவாளர் நரேந்திர படேல், தன்னை பா.ஜ.க.விற்குத் தாவச் செய்ய ஒரு கோடி ரூபாய் பேரம் நடைபெற்றதாகவும் அட்வான்ஸாக 10 லட்சம் ரூபாய் தந்ததாகவும் கடந்த 23ஆம் தேதி கூறியுள்ளார். இதன் எதிரொலியாக, ஏற்கெனவே பாஜகவில் ஐக்கியமான ஹர்திக் ஆதரவாளர் நிகில் சவானி ஒரு கோடி பேரம் பேசியதை அறிந்து கட்சியிலிருந்து கழன்றுகொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவின் குஜராத் வருகையின் போது அவருக்கு எதிராக கோஷம் போட ரூ.10 ஆயிரம் பணம் தருவதாக நரேந்திர படேலிடம் ஒருவர் பேசுவது போன்ற ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், இந்த ஒலிப்பதிவில் உள்ளது தனது குரல் அல்ல என்று நரேந்திர படேல் மறுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்திய மக்களின் செல்வாக்கைப் பெற்றவர் ஹர்திக் படேல். இவர் தனது போராட்டத்தில் தேசக் கொடியை அவமதித்ததாக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. குஜராத் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
இச்சூழலில் ஹர்திக் படேலின் ஆதரவாளர்களாக இருந்த வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இதனிடையே, ஹர்திக்கின் ஆதரவாளர் நரேந்திர படேல், தன்னை பா.ஜ.க.விற்குத் தாவச் செய்ய ஒரு கோடி ரூபாய் பேரம் நடைபெற்றதாகவும் அட்வான்ஸாக 10 லட்சம் ரூபாய் தந்ததாகவும் கடந்த 23ஆம் தேதி கூறியுள்ளார். இதன் எதிரொலியாக, ஏற்கெனவே பாஜகவில் ஐக்கியமான ஹர்திக் ஆதரவாளர் நிகில் சவானி ஒரு கோடி பேரம் பேசியதை அறிந்து கட்சியிலிருந்து கழன்றுகொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவின் குஜராத் வருகையின் போது அவருக்கு எதிராக கோஷம் போட ரூ.10 ஆயிரம் பணம் தருவதாக நரேந்திர படேலிடம் ஒருவர் பேசுவது போன்ற ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், இந்த ஒலிப்பதிவில் உள்ளது தனது குரல் அல்ல என்று நரேந்திர படேல் மறுத்துள்ளார்.