ஆப்நகரம்

பானி புயல் குறித்து கேட்டறிய மம்தாவை தொடர்புகொள்ள முடியவில்லை - பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்கத்தில், பானி புயல் தாக்கம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் கேட்டறிய பிரதமர் மோடி, இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவருடன் பேசமுடியவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 May 2019, 8:05 pm
மேற்கு வங்கத்தில், பானி புயல் தாக்கம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் கேட்டறிய பிரதமர் மோடி, இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவருடன் பேசமுடியவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil modi443


ஒடிசாவை தாக்கிய பானிப்புயல் மேற்கு வங்கத்திலும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்க ஆளுநரிடம் கேட்டறிந்த பிரதமர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் அதுகுறித்து பேசவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், புயல் சேத விவரங்களை கேட்டறிய பிரதமர் மோடி, மம்தாவை இருமுறை தொடர்பு கொண்டதாகவும், அப்போது அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி