ஆப்நகரம்

பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்ப்பதா? நீதிபதிகள் காட்டம்

டெல்லியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க இயலாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TNN 3 Nov 2017, 4:31 pm
டெல்லியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க இயலாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil we cannot sit idle while minor girls get raped hc slams centre
பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்ப்பதா? நீதிபதிகள் காட்டம்


தலைநகர் டெல்லியில் அண்மையில் 11 மாதங்களே நிறைந்த பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அரசின் மீது குற்றச்சாட்டுகளைக் கிளறியது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பாட் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து தானாக முன்வந்து விசாரித்தது.

அப்போது, மத்திய அரசு டெல்லியில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் 14 ஆயிரம் கூடுதல் போலீசாரை நியமிக்க ஒப்புதல் அளித்தது. ஆனால், இன்னும் அவர்களில் ஒருவர் கூட டெல்லியில் பணி நியமனம் செய்யப்படவில்லை. மாநில அரசும் சட்ட ஒழுங்கை கண்காணிக்க தவறிவிட்டது. என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், "டெல்லியில் கூடுதல் போலீசாரை நியமிப்பதில் மத்திய அரசு பரம்பதம் விளையாடிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் இந்த விஷயத்தில் ஒரே உத்தரவை திரும்பத் திரும்ப அளித்து வருகிறது. உறுதியாக, டெல்லி பாதுகாப்பாக வாழ ஏற்ற இடம் இல்லை. பிஞ்சுக் குழந்தைகள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது" என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் அறிவுறுத்தினர்.

அடுத்த செய்தி