ஆப்நகரம்

சீன நிதி உதவி திட்டங்கள்: ரத்து செய்தது மலேசியா!!

அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் சீனா நிதி உதவியால் மலேசியாவில் நடக்கும் திட்டங்களை அந்த நாட்டின் பிரதமர் மஹதிர் மொஹம்மது ரத்து செய்தார்.

Samayam Tamil 21 Aug 2018, 5:58 pm
அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் சீனா நிதி உதவியால் மலேசியாவில் நடக்கும் திட்டங்களை அந்த நாட்டின் பிரதமர் மஹதிர் மொஹம்மது ரத்து செய்தார்.
Samayam Tamil சீன நிதி உதவி திட்டங்கள்: ரத்து செய்தது மலேசியா!!
சீன நிதி உதவி திட்டங்கள்: ரத்து செய்தது மலேசியா!!


சீனத் தலைநகர் பீஜிங் சென்று இருக்கும் மலேசிய பிரதமர் மஹதிர் மொஹம்மது இதுகுறித்து கூறுகையில், ''சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகுயாங்க் இருவரும் மலேசியாவில் நடக்கும் சீன திட்டங்கள் தேவையில்லை என்பதை உணர்ந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆலோசித்தோம். புரிந்து கொண்டு மலேசியாவில் நடக்கும் திட்டங்களை கைவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இந்த திட்டங்கள் அனைத்துக்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. சீனாவிடம் வாங்கும் அந்த நிதியை எங்களால் திரும்ப செலுத்த இயலாது.

இந்த திட்டங்கள் தேவை என்று எதிர்காலத்தில் உணரும்பட்சத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. தற்போதைய மலேசிய அரசின் நோக்கம் அனைத்தும் தேசத்தின் கடன் சுமையைக் குறைப்பதுதான். தற்போது இருக்கும் கடன் சுமையை கவனத்துடன் கையாளாவிட்டால், நாங்கள் திவால் ஆகிவிடுவோம். அந்தளவிற்கு கடந்த ஆட்சி கடன் சுமையை விட்டுச் சென்றுள்ளது'' என்றார்.

சீனா செல்வதற்கு முன்பே பேட்டி அளித்து இருந்த மஹதிர், ''மலேசியாவுக்கு எந்த திட்டங்களும் தேவையில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

ஆசியாவில் ரோடு அமைப்பது, துறைமுகம் அமைப்பது, சாலை அமைத்துக் கொடுப்பது என்று சீன வங்கிக் கடன் உதவியுடன் சீன அரசு செய்து வருகிறது. பெல்ட் அண்டு ரோடு புராஜக்ட்ஸ் என்ற பெயரில் சீனா செய்து வரும் திட்டங்களால் ஸ்ரீ லங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் ஊடுருவி இந்த திட்ட வேலைகளை கையாளுவதால், அந்தந்த நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பறிபோகிறது என்ற கருத்து எழுந்துள்ளது.

அடுத்த செய்தி