ஆப்நகரம்

போதிய உணவு வழங்கப்படவில்லை: ராணுவ வீரர் புகார் (அதிர்ச்சி வீடியோ)

போதிய தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற ராணுவ வீரரின் குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Hindustan Times 10 Jan 2017, 2:12 pm
போதிய தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற ராணுவ வீரரின் குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we go to sleep on empty stomach bsf jawan posts video of food served on duty
போதிய உணவு வழங்கப்படவில்லை: ராணுவ வீரர் புகார் (அதிர்ச்சி வீடியோ)


இந்திய ராணுவத்தின் 29வது பட்டாலியனில் கான்ஷ்டேபிளாக பணி புரிபவர் தேஜ் பகதூர் யாதவ். இவர் ராணுவ வீரர்கள் போதிய உணவின்றி தவிப்பதாக நான்கு வீடியோக்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அந்த ராணுவ வீரர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது , " எங்களுக்கு தினமும் காலையில் வெறும் ரோட்டி மற்றும் டீ மட்டுமே கல்லை உணவாக வழங்கப்படுகிறது. மதியம் பருப்பும், சப்பாத்தியுடன் மஞ்சளும் வழங்கப்படுகிறது. இந்த உணவிற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாயோ அல்லது காய்கறிகளோ வழக்கப்படுவது இல்லை. தினமும் 11 மணி நேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச் செல்கிறோம். எங்களின் அவல நிலை யாருக்கு தெரியாமல் உள்ளது . அதனை தெரியப்படுத்தவே இந்த வீடியோ வெளியிட்டுள்ளேன். இந்த விகாரத்து பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.



ராணுவ வீரரின் இந்த குற்றச்சாட்டு குறித்த வீடியோவை ராஜ்நாத் சிங் பார்த்தாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். I have seen a video regarding a BSF jawan's plight. I have asked the HS to immediately seek a report from the BSF & take appropriate action. — Rajnath Singh (@rajnathsingh) January 9, 2017

அடுத்த செய்தி