ஆப்நகரம்

ப்ரீயா விடுங்க மக்களே! மேஜர் கோகோய்க்கு ஜேட்லி ஆதரவு!

மேஜர் கோகாய் மீதான மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ராணுவ வீரர்களை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

TNN 25 May 2017, 8:26 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை சாதுர்யமாக எதிர்கொண்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்துள்ளார் இந்திய ராணுவ அதிகாரி மேஜர் லீடுல் கோகோய்.
Samayam Tamil we should allow our army officers to take a decision on the spot jaitley
ப்ரீயா விடுங்க மக்களே! மேஜர் கோகோய்க்கு ஜேட்லி ஆதரவு!


கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. குந்திபூரா பகுதியில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு படை வீரர்கள் மீது சிலர் கல்வீச்சத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்களில் ஒருவரை தங்கள் ஜீப் உடன் கட்டி கல்வீச்சுத் தாக்குதலுக்குக் கேடயமாக்கிக்கொண்டனர். இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதற்கு மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பின்னர், கல்வீசிய நபர்களில் ஒருவரை ஜீப்பில் கட்டியது மேஜர் லீடுல் கோகோய் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் கூறப்பட்டன. அவற்றிற்கு பதிலளிக்க செய்தியாளர்களைச் சந்திப்பதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
Government supports the actions of #IndianArmy across LoC. Such actions are needed to ensure peace in J&K. — Arun Jaitley (@arunjaitley) May 23, 2017 இச்சூழலில், மேஜர் லீடுல் கோகோய்க்கு ராணுவத்தில் சிறப்பாக செயல்பட்டவருக்கான Chief of Army Staff’s Commendation card என்ற பெருமைக்குரிய பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மேஜர் கோகோய், “மக்களைக் காப்பாற்றுவதற்காகவே கல்வீசியவர்களில் ஒருவரை ஜீப்பில் கட்டினேன். கல்வீசிய சமூக விரோதிகள் கையில் பெட்ரோல் வெடிகுண்டுகளும் தயாராக இருந்தன. நான் அப்படிச் செய்ததால் அங்கு நேர்ந்திருக்க வாய்ப்புள்ள அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி