ஆப்நகரம்

எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி: ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடி

எல்லையில் யாராவது அத்துமீறலில் ஈடுபட்டால், தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் என்று புதிய ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

TNN 2 Jan 2017, 5:26 am
டெல்லி: எல்லையில் யாராவது அத்துமீறலில் ஈடுபட்டால், தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் என்று புதிய ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
Samayam Tamil we want peace but army wont hesitate to use force if necessary says bipin rawat
எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி: ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடி


இந்திய ராணுவத் தளபதியாக இருந்த தல்பீர் சிங்கின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன் தினம் முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தல்பீர் சிங், பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து பிராந்திய தளபதிகளும் தொலைபேசியில் பேசினர். எல்லைப் பகுதி நிலவரங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு புதிய ராணுவ தளபதி பிபின் ராவத் பேட்டியளித்தார்.

எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் ராணுவத்தினர் நிலைநாட்ட வேண்டும் என்று கூறினார். ஆனால் யாராவது அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் என்று தெரிவித்தார். எப்போதும் ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ராணுவத்தினருக்கு ஒற்றுமை தான் மிக முக்கியம் என்றும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

General Bipin Rawat on Sunday said the Indian Army’s role was to ensure peace along the borders but it would not hesitate to use force if needed.

அடுத்த செய்தி