ஆப்நகரம்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மம்தாவுடன் சிவசேனா கைகோர்ப்பு

ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளார்.

TNN 16 Nov 2016, 8:45 am
புதுடெல்லி : ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளார்.
Samayam Tamil we will be going with mamata ji to meet the president today arvind sawantshiv sena demonetisation
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மம்தாவுடன் சிவசேனா கைகோர்ப்பு


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளூம் ஊர்வலமாக சென்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது குறித்து பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

மம்தாவின் ஆலோசனைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மம்தாவுடன் கைகோர்க்க சிவசேனா திட்டமிட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின், மதியம் 1.30 மணியளவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து குடியரசுத்தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி