ஆப்நகரம்

இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்: வாரணாசியில் பிரதமர் மோடி பரப்புரை பேச்சு

இழந்த பெருமையை மீட்டெடுப்போம் என்று காசியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

TNN 5 Mar 2017, 1:05 am
வாரணாசி: இழந்த பெருமையை மீட்டெடுப்போம் என்று காசியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
Samayam Tamil we will bring back our heritage says pm modi in varanasi
இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்: வாரணாசியில் பிரதமர் மோடி பரப்புரை பேச்சு


நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் 404 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி, பாஜக, பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 7ஆம் கட்டத் தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி, வாரணாசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காசியில் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்று கூறினார். பழமைக்கும், புதுமைக்கும் இடையேயான பாலமாக வாரணாசி விளங்குவதாக தெரிவித்தார். பொதுமக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டார். மேலும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார். இதற்கிடையில் அனுமதியின்றி பிரசாரக் கூட்டத்தை பாஜக நடத்தியதாக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

We will bring back our heritage says PM Modi in Varanasi.

அடுத்த செய்தி