ஆப்நகரம்

Kerala Flood: மீண்டும் கனமழை எச்சரிக்கை - கேரள மக்கள் பீதி

மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளா மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 18 Aug 2018, 7:47 am
திருவனந்தபுரம் : மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளா மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil kerala


கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருவதோடு, எல்லா அணைகளும் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதனால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 14 மாவட்டங்களில் 13ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளத்தால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்த பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மோடி ஆய்வு:

நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதிச் சடங்கு முடித்த பின்னர், வெள்ள நிலைமையை அறிய பிரதமர் மோடி கேரளா சென்றார். இன்று வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார்.

மீண்டும் கனமழை அபாயம்;
இந்நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்றும், 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஏற்கனவே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு மேலும் பீதியை கொடுத்துள்ளது.



கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செலவுக்காக, மதுவகைகளின் சுங்கவரியை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகளுக்கு நவம்பர் 30ம் தேதி வரை சுங்க வரி உயர்த்தப்படட் உள்ளது.

கேரளா மாட்டுமில்லாமல் குஜராத், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், தென் கிழக்கு ராஜஸ்தானிலும் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி