ஆப்நகரம்

மேற்கு வங்கத்தில் ஆண்டு முழுவதும் பார்கள் இயங்க அனுமதி

மேற்கு வங்கத்தில், ஆண்டின் 365 நாட்களிலும் மதுபான விடுதிகள் செயல்படுவதற்கு, அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

TNN 24 Aug 2016, 2:27 am
மேற்கு வங்கத்தில், ஆண்டின் 365 நாட்களிலும் மதுபான விடுதிகள் செயல்படுவதற்கு, அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil west bengal allows bars to serve alcohol 365 days
மேற்கு வங்கத்தில் ஆண்டு முழுவதும் பார்கள் இயங்க அனுமதி


அம்மாநிலத்தில், அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் மதுபான விடுதிகள் இயங்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு, நட்சத்திர ஓட்டல்கள் உள்பட அனைத்து விதமான மதுபான விடுதிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மதுபான விடுதிகளுக்கான விடுமுறை நாட்களை, 11ல் இருந்து, 4 நாட்களாகக் குறைத்து, மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்களில் 365 நாட்களும் மதுபான விடுதிகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மாநில அரசுக்குக் கூடுதலாக, ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் என்றாலும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படும். அதை தவிர்க்கும் விதமாக, சட்டப்பூர்வ மதுவிற்பனையை அங்கீகரித்தால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால், இம்முடிவை மேற்கொள்வதாகவும் மேற்கு வங்க அரசின் செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி