ஆப்நகரம்

எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: மேற்கு வங்க முதல்வர் அதிரடி

மேற்கு வங்கத்தில் எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

Samayam Tamil 24 Nov 2018, 12:24 pm
மேற்கு வங்கத்தில் எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
Samayam Tamil mamata-pti_


மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மமதா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அண்மையில் கொல்கத்தாவில் உள்ள தக்ஷ்ணே்ஷ்வர் காளி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக நடைமேம்பாலம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்வங்க முதல்வர் சமீபத்தில் தக்ஷ்ணேஷ்வர் கோவில் மேம்பாலம் வழியாக சென்றுள்ளார். அப்போது வழியேங்கும் வெத்தலை, பான்பராக்கு, குட்கா எச்சில் பாலம் திறந்து கொஞ்ச நாட்களில் இவ்வளவு அசுத்தமாகக்கி விட்டார்களே என்று மம்தா மனம் நொந்து போனார். மேலும், நகரின் பல்வேறு இடங்களிலும் பலர் அசுத்தம் செய்வது அவரது கவனத்துக்குச் சென்றது.

பொதுஇடத்தில் அசுத்தம் செய்பவர்களை தண்டிக்கும் விதமாக ஏற்கனவே 50 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் சட்டம் இருந்தது. இந்த நிலையில், இந்த சட்டத்தை திருத்தியமைத்து அபராதத் தொகையை உயர்த்த மம்தா முடிவு செய்தார். அதன்படி, பொது இடத்தில் எச்சில் துப்பினால் 5,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வியாழனன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களை கண்காணிக்கும் வகையில், 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் நியமிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி