ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த வாலிபர்: எரியும் தீயோடு வாலிபரை கட்டிப்பிடித்த பெண்!

பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த வாலிபர்: எரியும் தீயோடு வாலிபரை கட்டிப்பிடித்த பெண்!

Samayam Tamil 6 Mar 2019, 1:21 pm
மேற்கு வங்க மாநிலத்தில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்துள்ளார். அந்நேரத்தில், எரியும் தீயோடு ஆவேசத்தில் வந்த பெண் வாலிபரை கட்டிபிடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது
Samayam Tamil fire suicide


மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைதச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும் போது, வாலிபர் ஒருவர் கதவை பூட்டி விட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அப்பெண்ணை உயிரோடு தீ வைத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த அந்த பெண், எரியும் தீயோடு வாலிபரை கட்டிபிடித்தார். வாலிபரின் உடலிலும் தீ பிடிக்க இருவரும் உயிருக்குப் போராடினர்.

இதனிடையே வீட்டினுள் இருந்து புகையும், அலறல் சத்தமும் வந்ததைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் உயிரிழந்தார். உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி