ஆப்நகரம்

இன்று முதல் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு; மாறாத கட்டுப்பாடுகள் என்னென்ன?

நவம்பர் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாறாத கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 1 Nov 2020, 8:22 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்படவில்லை. கடந்த அக்டோபர் 31ஆம் தேதியுடன் ஐந்தாம் கட்ட தளர்வுகள் நிறைவடைந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகளின்றி கட்டுப்பாடுகள் தொடரும்.
Samayam Tamil Unlock 6.0 Guidelines


மற்ற இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் பொதுமக்கள் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை. இதற்காக இ-பாஸ் போன்ற பிரத்யேகமாக எந்தவித அனுமதியும் பெற தேவையில்லை.

நவம்பர் 30 வரை தொடரும் கட்டுப்பாடுகள்

* உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த குறிப்பிட்ட வழித்தடங்களைத் தவிர்த்து, மற்ற பகுதிகளுக்கு சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்.

* தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் உள்ளிட்டவற்றில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை தொடர்ந்து திறக்கப்படலாம்.

* விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.

* பள்ளிகள், பயிற்சி மையங்கள் படிப்படியாக திறக்கப்பட வேண்டும். ஆன்லைன் அல்லது தொலைதூர கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு அதிகபட்சமாக 100 பேர் வரை அனுமதிக்கலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இத்தகைய தளர்வு கிடையாது.

நவம்பர் 1 முதல் மாறும் ரூல்ஸ்; சாமானியர்கள் வாழ்வை புரட்டி போடும் விஷயங்கள்!

* கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, மதம் சார்ந்த, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் வரை அனுமதிக்கலாம்.

* மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எவை என்று அவ்வப்போது மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்கும்.

* மெட்ரோ ரயில் சேவை, ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள், மருத்துவ சேவை, பயிற்சி மையங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம்.

* பள்ளி, கல்லூரிகள் திறப்பு, திருமணம், இறுதிச் சடங்குகள் போன்றவற்றிற்கான அனுமதி குறித்து தங்கள் பகுதிகளில் நிலவும் கொரோனா பரவலுக்கு ஏற்ப மாநில அரசுகள்/ யூனியன் பிரதேச அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி