ஆப்நகரம்

இந்தியாவில் முழு ஊரடங்கு: மோடியின் நிலைப்பாடு இதுதானாம்!

இந்தியாவில் முழு ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மோடி என்ன முடிவெடுப்பார் என்பது குறித்த தகவல்கள் வெளிவருகின்றன.

Samayam Tamil 8 May 2021, 3:18 pm
இந்தியாவின் கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பையும் உயிரிழப்பையும் பார்த்து மத்திய அரசு கவலைகொள்கிறதோ இல்லையோ உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் இதை கவனத்தில் கொள்கின்றன.
Samayam Tamil pm modi


இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வெளிநாடுகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பாதிப்புகளை குறைக்க மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகளும் அதிகம். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கவும், தடுப்பூசிகள் ஒரே விலையில் நாடு முழுவதும் கிடைக்கவும் மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி திருவிழா நடத்துகிறோம் என விளம்பரம் செய்தவர்களால் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கே அதை வழங்கமுடியவில்லை. பல இடங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாம் தவணைக்கு காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு: அரசு அதிரடி அறிவிப்பு!
தேவையான இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்குகூட போக்குவரத்து கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் பெரும் சோகம்.

ஏற்கெனவே மாநில அரசுகளின் வரி வருவாயை வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு விருப்பமான மாநிலங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்குவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்நிலையில் இருக்கும் நிதியைக் கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. அத்துடன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கத்தை அறிவித்து அதன் மூலம் வரும் இழப்புகளையும் மாநில அரசும், மக்களும் சுமக்கும் நிலைதான் உள்ளது.

பிரதமர் கொரோனா பரவல் குறித்து அமைச்சரவைக் கூட்டம் நடத்துவதையும், சில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி? வெளியான முழு விவரம்!

இருப்பினும் நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதன் சங்கிலியை முழு ஊரடங்கு விதிக்கவோ, அதன்மூலம் வரும் இழப்புகளை சரிகட்ட நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லை. மாறாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசின் பணி என்றும் ஊரடங்கின் மூலம் வரும் பொருளாதார இழப்புகளை சரிகட்டுவது மாநில அரசுகளின் தலையெழுத்து என்றும் நழுவிக் கொள்கிறது மத்திய அரசு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி