ஆப்நகரம்

தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்தவை மக்களாட்சிக்கு விரோதமானது: வெங்கையா நாயுடு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் மக்களாட்சிக்கு விரோதமானது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

TNN 19 Feb 2017, 4:19 pm
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் மக்களாட்சிக்கு விரோதமானது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil what happened in tn assembly was disgrace to democracy says venkaiah naidu
தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்தவை மக்களாட்சிக்கு விரோதமானது: வெங்கையா நாயுடு


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த நிலையில், நேற்று அதற்கான தீர்வு கிடைத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்வு, மக்களாட்சிக்கு விரோதமானது என்று கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 122 வாக்குகள் பெற்று, முதலமைச்சர் பழனிச்சாமி வெற்றி பெற்றார்.

What happened in Tamil Nadu assembly yesterday was disgrace to democracy: Union Minister Venkaiah Naidu.

அடுத்த செய்தி