ஆப்நகரம்

பிகாரில் ஆட்சியமைக்க போட்டி: தேஜஸ்வி முன்னெடுக்கும் பிளான் பி!

பிகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாள்களுக்கு மேலாகியும் அங்கு அரசியல் களம் தேர்தலுக்கு முன்பிருந்த அதே சூட்டோடு தான் இருக்கிறது.

Samayam Tamil 13 Nov 2020, 10:19 am
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பின்னுக்குத் தள்ளி தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி வெற்றியை நெருங்கி வந்து அந்த வாய்ப்பை இழந்தது.
Samayam Tamil what is plan b that tejaswi yadav is trying to rule in bihar
பிகாரில் ஆட்சியமைக்க போட்டி: தேஜஸ்வி முன்னெடுக்கும் பிளான் பி!


பிகாரின் தற்போதைய நிலவரம்!

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், விகாசில் இன்சான் கட்சி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் இணைந்து உருவாக்கிய மகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றியது.

பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவையான நிலையில் 3 இடங்கள் மட்டுமே கூடுதலாக தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகளில் சொற்ப அளவிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி, மகா கூட்டணியை முந்தியுள்ளது. அதிலும் மாநிலத்தில் மற்ற கட்சிகளைவிட அதிக இடங்களை (75) கைப்பற்றியுள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம்.

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இந்த முறை அனைத்து பூஜைகளும் உண்டு!

பாஜக - நிதிஷ்குமார் : உறவு எப்படி உள்ளது?

எதிர்கட்சிகளைக் காட்டிலும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நிதிஷ்குமாரை முந்தவே அதிக முயற்சிகள் பாஜக செய்ததோ என்று வெளிப்படையாக விமர்சனங்கள் எழும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மாநிலத்தில் செல்வாக்குடன் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் பாஜக 74 இடங்களில் வென்றது. இதனால் தேர்தலுக்கு பின் பிகார் அரசியல் களத்தில் காட்சிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பிகாரில் பலிக்குமா மகாராஷ்டிரா மாடல்!

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனா பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்துவந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போல் பிகாரில் நிதிஷ்குமார் கூட்டணி மாறுவாரா என்றும் பேசப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு நிதிஷ்குமார்தான் முதல்வர் என பாஜக கூறிவருகிறது. இதனால் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக திங்கள் கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆனாலும் தேஜஸ்வி ஆட்சி அமைக்கும் முயற்சியை கைவிடவில்லை.

பிளான் பி என்ன?

இரு கூட்டணிகளுக்கு இடையிலான தொகுதி எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் தேஜஸ்வி வேறு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்று தலா 4 இடங்களைப் பெற்றுள்ள விகாசில் இன்சான் கட்சி (விஐபி), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு வரை மகா கூட்டணியில் இருந்தன. கூட்டணியில் தங்களுக்கு மதிப்பில்லை என்று கூறி அக்கட்சிகள் அணி மாறின.

தேஜஸ்வி போடும் கணக்கு!

இக்கட்சிகளின் தலைவர்களை தேஜஸ்வி யாதவ் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டுவருவதாக பிகார் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் விகாசில் இன்சான் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தேஜஸ்வி கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

தீபாவளி வந்தாச்சு: தமிழக மக்களுக்கு ரூ.2,000 பரிசுத் தொகை?

தற்போது மகா கூட்டணிக்கு 110 இடங்கள் உள்ள நிலையில், இந்த இரு கட்சிகளின் 8, ஓவைசி கட்சியின் 5 தொகுதிகள் சேர்ந்தால் ஆட்சியமைக்க கூடிய 123 இடங்கள் கிடைத்துவிடும் என தேஜஸ்வி கணக்கு போடுகிறார். எனவே பிகாரின் அரசியல் களநிலவரம் தொடர்ந்து பரபரப்பை தக்கவைத்துக்கொண்டே உள்ளது.

அடுத்த செய்தி