ஆப்நகரம்

கேரளாவில் பரவும் புதிய பாக்டீரியா: மக்களே உஷார்!

கேரளாவில் பரவும் புதிய நோய் தொற்றால் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Dec 2020, 9:54 am
கொரோனா வைரஸ் பரவலின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கேரளாவில் புதிய பாக்டீரியா ஒன்று பரவி வருகிறது.
Samayam Tamil kerala infection


கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் 11 வயது சிறுவனுக்கு லேசான வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இரு நாள்களுக்கு முன்னாள் உயிரிழந்தான். இதேபோன்ற பாதிப்புகளுடன், 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயஸ்ரீ, ''இந்த பகுதியில்,'ஷிகெல்லா பாக்டீரியா' தொற்று ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே, நோயினால் பாதிகக்கப்பட்டுள்ளனர் '' என்று கூறியுள்ளார்.

விஜய் நடத்தும் அவசர ஆலோசனை: என்ன நடக்கிறது பனையூரில்?

ஷிகெல்லா பாக்டீரியா அசுத்தமான நீர் அல்லது பழைய உணவை உட்கொள்வதன் மூலம் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கு கேரளாவில் 20க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா, “அசுத்தமான நீர், உணவு மூலம் இந்த நோய் ஏற்படுவதாக தெரிகிறது. ஓரிரு நாட்களில் சுகாதார முகாம் நடத்தப்பட்டு, நோய் தொற்றுக்கான காரணங்கள் கண்டறியப்படும்” என்று கூறியுள்ளார்.

ரஜினி சின்னத்தில் என்ன சிக்கல்? வக்கீல்களுடன் அவசர ஆலோசனை!

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நீரிழப்பு, சோர்வு ஆகியவை ஏற்படும். உரிய சிகிச்சை பெற்றால் பாக்டீரியாவிலிருந்து எளிதாக தப்பிக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி