மர்ம நோயால் அவதி
பாதிக்கப்பட்ட அனைவரும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது. இருப்பினும் அது உறுதிப்படுத்தப் படவில்லை. இதுபற்றி தகவலறிந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் எலுருவிற்கு விரைந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
முதல்வர் நேரில் ஆறுதல்
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை, ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அல்லா நானி நேரில் சந்தித்தார். அவர் எலுரு மற்றும் விஜயவாடா மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட்டார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
குண்டுவெடிப்பில் சசிகலா படுகாயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
பலியான சோகம்
தற்போது வரை சுமார் 600 பேர் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 330 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களது உடலில் ஏதேனும் வேதிப் பொருட்கள் கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 45 வயதான ஸ்ரீதர் என்ற நபர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நிபுணர்கள் குழு ஆய்வு
இந்த சூழலில் டெல்லி எய்ம்ஸ், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், ஐஐசிடி, சிசிஎம்பி, ஹைதராபாத்தில் உள்ள என்.ஐ.என் ஆகியவற்றின் நிபுணர்கள் அடங்கிய குழு எலுருவில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் எலுரு மக்கள் அருந்திய தண்ணீர் வைரஸால் அசுத்தமடைந்திருக்கலாம் அல்லது பூச்சிக் கொல்லி மருந்துகள் ஏதேனும் கலந்திருக்கலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் தொடங்கிய 'அருண் விஜய் 31'
குடிநீரில் ஆபத்தான வேதிப்பொருள்
இதுதொடர்பாக விஜயவாடாவில் உள்ள தனியார் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் குடிநீரில் டைகுளோரோ டைபீனைல் டை குளோரோ ஈத்தேன் என்ற வேதிப்பொருள் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இது ஒரு லிட்டரில் 14.21 முதல் 15.23 மில்லிகிராம் வரை காணப்பட்டது. ஆனால் மனிதர்கள் ஏற்கத்தகுந்த அளவு என்பது 0.0001 மில்லிகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளிகள் உடலில் அதிர்ச்சி
இதேபோல் அலகுளோர் 10.88 மில்லிகிராமும், மெத்தோ ஸைகுளோர் 17.64 மில்லிகிராமும் இருந்துள்ளது. இவை 0.001 மில்லிகிராம் அளவு மட்டுமே மனிதர்களால் உட்கிரகிக்கக் கூடியது. எனவே அதிகப்படியான வேதிப்பொருள் கலப்பு தான் பொதுமக்களின் உடல்நலனை பாதித்திருப்பது தெரிகிறது. மேலும் நோயாளிகளில் ரத்த மாதிரிகளில் அதிகப்படியான லெட் மற்றும் நிக்கல் வேதிப்பொருட்கள் இருப்பதாக எய்ம்ஸ் மங்களகிரி அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு
இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில், 20க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, குடிநீரின் நிறம் மற்றும் சுவையில் மாற்றம் காணப்பட்டது. வீட்டிற்கு வரும் குடிநீர் முற்றிலும் மாறுபட்டு இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள்
எலுரு நகருக்கு இரண்டு பாசன கால்வாய்களின் இணைப்பு இருக்கிறது. அதில் ஒன்று ராஜமுந்திரியில் இருந்தும், மற்றொன்று விஜயவாடாவில் இருந்தும் வருகிறது. இதன்மூலம் எலுரு நகரம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். இதில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவை கலந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அடுத்தடுத்து 19 நிலநடுக்கங்கள்; பீதியில் இந்தியா - அச்சத்தில் மக்கள்!
உரிய சிகிச்சைக்கு உத்தரவு
அடுத்தகட்ட ஆய்விற்காக நோயாளிகளின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து விரைவில் மீண்டும் வர அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.