ஆப்நகரம்

கிடுகிடுவென உயர்ந்த கொரோனா.. மத்திய அரசின் சீக்ரெட் பிளான்!

கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு அதிரடியாக திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுத்தவுள்ளது

Samayam Tamil 24 Feb 2021, 4:51 pm
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதனால் அதிகரிக்கிறது என்பதை கண்டறியும் பொருட்டு உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இக்குழுவினர் கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மாநில அரசுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil what led to the recent spike in the number of covid19 cases centre deputes team
கிடுகிடுவென உயர்ந்த கொரோனா.. மத்திய அரசின் சீக்ரெட் பிளான்!



இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. என்ன நடக்கிறது என்று மத்திய, மாநில அரசுகள் சுதாரிப்பதற்குள் கொரோனா தொற்று மலமலவென உயர்ந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியதும் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வருகிற 28ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒருபுறம் அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மறுபுறம் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் மருத்துவ வல்லுநர்கள் ஈடுபட்டனர். அதன்பலனாக, இந்தியாவில் கொரோனாவுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரத் தேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த தடுப்பூசிகள் கடந்த மாதம் முதல் போடப்பட்டு வருகிறது. அதேசமயம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

புதிய வகை கொரோனாக்கள்

40 லட்சம் ட்ராக்டர்கள் ரெடி.. அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!

கொரோனாவுக்கான தடுப்பூசிகளால் பொதுமக்களிடையே நம்பிக்கை பிறந்ததற்கிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் அசுர வேகத்தில் பரவுவதால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தென் ஆப்பிரிக்காவிலும், பிரேசிலிலும் மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபியல் மாற்றம் பெற்ற கொரோனாவால் உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா தொற்று பலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

கிடுகிடுவெனெ உயரும் கொரோனா

நாடு முழுவதும் Active Covid-19 cases என்று சொல்லப்படக் கூடிய எண்ணிக்கை 1.50 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ள நிலையில், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தெலுங்கானா, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றால் நாள்தோறும் சராசரியாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இம்மாத தொடக்கத்தில் இருந்து தொற்றின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும் நாள்தோறும் 4000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் அமல்; கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்!

கட்டுப்பாடுகளை யாரும் பின்பற்றுவதில்லை

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்படிருந்த கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றியதால் அதன் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்தது. ஆனால், அந்த கட்டுப்பாடுகளை, நடத்தை விதிகளை பின்பற்றுவதில் தற்போது இருக்கும் சுணக்கமே இந்த திடீர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், மரபியல் ரீதியாக மாற்றமடைந்திருக்கும் கொரோனாவுக்கு, தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் எந்த அறிவியல்பூர்வமான தொடர்பும் இல்லை. கடந்த ஆண்டில் இருந்து மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா இந்தியாவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சீக்ரெட் ப்ளான்

அதிகரித்து வரும் கொரோன தொற்றின் எண்ணிக்கையை குறைப்பதில் முனைப்பு காட்டி வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எண்ணிக்கை அதிகரிப்புக்கு பின்னால் இருக்கும் காரணங்களை கண்டறிய பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை எதனால் அதிகரிக்கிறது என்பதை கண்டறியும் பொருட்டு உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழுவினர், மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு அதற்கான காரணத்தை கண்டறிவதுடன், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் பொருட்டு அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொள்வர். இந்த அறிக்கையானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அடுத்த செய்தி