ஆப்நகரம்

வாடஸ் அப் வதந்தியால் திருநங்கை அடித்துக் கொலை- 14 பேர் கைது

குழந்தை கடுத்துவதாக வந்த வாட்ஸ் அப் புரளியை நம்பி, திருநங்கை ஒருவரை கொலை செய்த கும்பலை ஹைதராபாத்தின் தென் மண்டல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 31 May 2018, 6:01 pm
குழந்தை கடுத்துவதாக வந்த வாட்ஸ் அப் புரளியை நம்பி, திருநங்கை ஒருவரை கொலை செய்த கும்பலை ஹைதராபாத்தின் தென் மண்டல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil m1xhas10144zk8tfp6ad_400x400
வாடஸ் அப் வதந்தியால் திருநங்கை அடித்துக் கொலை


வடமாநிலங்களிலிருந்து சில கும்பல்கள் தென்னிந்தியாவின் சில மாநிலங்களில் குழந்தை திருடு ஊடுருவி உள்ளதாக வாடஸ் அப்பில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது.

இதை நம்பி சந்திரயன் கட்டா கிராம மக்கள் கடந்த மே 26 அன்று ஹுசேன், முகாரம் மற்றும் ரபிக் ஆகியோரின் மீது சந்தேகம் கொண்டு தாக்கினர்.

அப்போது இந்த செயலைக் கண்டு பயந்த திருநங்கைகள் அங்கிருந்து ஓடினர். அவர்கள் மீது சந்தேகப்பட்டு துரத்திய கூட்டம் அடித்ததில் அதில் ஒரு திருநங்கை உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 14 பேரை கைது செய்திருக்கிறது ஹைதராபாத்தின் தென் மண்டல காவல்துறை. சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளால் இதுபோல் பல அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி