சூரத்: காரில் சென்று கொண்டிருந்த மோடி, திடீரென சாலையோர சிறுமிக்காக காரை நிறுத்தி உரையாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். இந்நிலையில் அவர் காரில் நகருக்குள் வலம் வந்து கொண்டிருந்த போது, சாலையோரத்தில் நடந்து சென்ற சிறுமியை கண்டார். உடனே காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்தார். இதையடுத்து பாதுகாவலர்கள் உடனடியாக காரின் கதவை திறந்தனர். பின்னர் காவல் அதிகாரிகளிடம் சாலையில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமியை அழைத்து வருமாறு கூறினார். நான்சி என்ற அச்சிறுமி, மோடியை பார்த்ததும் சற்று அச்சமடைந்தார்.
அவர் சிறுமியை தனது மடியில் வைத்து கொண்டு மென்மையாக பேசினார். தங்களின் பெயர் என்ன என்றும், கையில் என்ன அணிந்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அச்சிறுமி பொறுமையாக பதிலளித்தார். கையில் கடிகாரம் என்று கூறிய சிறுமியிடம், மணி எத்தனை என்றும் கேட்டார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட கூட்டம், மோடி, மோடி என்று ஆரவாரம் செய்தது. பலத்த பாதுகாப்பையும் தாண்டி வந்து, சாலையோர சிறுமியிடம் பிரதமர் மோடி உரையாடிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
Prime Minister Narendra Modi surprised residents of diamond city+ when he stopped his high security cavalcade to meet a 4-year-old girl who walked towards his SUV.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். இந்நிலையில் அவர் காரில் நகருக்குள் வலம் வந்து கொண்டிருந்த போது, சாலையோரத்தில் நடந்து சென்ற சிறுமியை கண்டார். உடனே காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்தார். இதையடுத்து பாதுகாவலர்கள் உடனடியாக காரின் கதவை திறந்தனர். பின்னர் காவல் அதிகாரிகளிடம் சாலையில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமியை அழைத்து வருமாறு கூறினார். நான்சி என்ற அச்சிறுமி, மோடியை பார்த்ததும் சற்று அச்சமடைந்தார்.
அவர் சிறுமியை தனது மடியில் வைத்து கொண்டு மென்மையாக பேசினார். தங்களின் பெயர் என்ன என்றும், கையில் என்ன அணிந்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அச்சிறுமி பொறுமையாக பதிலளித்தார். கையில் கடிகாரம் என்று கூறிய சிறுமியிடம், மணி எத்தனை என்றும் கேட்டார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட கூட்டம், மோடி, மோடி என்று ஆரவாரம் செய்தது. பலத்த பாதுகாப்பையும் தாண்டி வந்து, சாலையோர சிறுமியிடம் பிரதமர் மோடி உரையாடிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
Prime Minister Narendra Modi surprised residents of diamond city+ when he stopped his high security cavalcade to meet a 4-year-old girl who walked towards his SUV.