ஆப்நகரம்

சினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது? - தேதி வெளியிட்ட மாநில அரசு!

இசை, நடனம், நாடகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2020, 5:31 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் திரையுலகம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Cinema Halls Reopen


ஆனால் சினிமா தியேட்டர்கள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக மத்திய அரசும் எந்தவித வழிகாட்டுதல்களையும் பிறப்பிக்காத காரணத்தால் மாநில அரசும் இந்த விஷயத்தை தள்ளிப்போட்டு வந்தது.

மாணவர்கள் கவனத்திற்கு: நவம்பர் திட்டத்தில் கைகோர்க்கும் பள்ளிகள்!

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இசை, நடனம், மாயாஜால நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சினிமா தியேட்டர்கள், திறந்தவெளி திரையரங்குகளும் திறந்து கொள்ளலாம். அதேசமயம் 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பார்வையாளர்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜி பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி