ஆப்நகரம்

அயோத்தி ராமர் கோவில்: பக்தர்கள் தரிசனம் எப்போது?

அயோத்தி ராமர் கோவிலில் எப்போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Sep 2021, 9:14 am
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பணிகளை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பக்தர்கள் நன்கொடை வழங்குகின்றனர்.
Samayam Tamil Ayodhya Ramar Temple


அயோத்தி ராமர் கோவில் எப்போது கட்டி முடிக்கப்படும், எப்போது பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படும் என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்டோபர் மாதத்துக்குள் அஸ்திவாரம் தயாராகிவிடும் என்றும் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: திடீரென அதிகரித்த கொரோனா!
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே, “அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்துக்குள் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிந்து விடும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “2023ஆம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவங்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி