ஆப்நகரம்

மோடியின் கேடித்தனத்தை அவிழ்த்துவிட்ட மன்மோகன் சிங்!!

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி, 2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 18 Mar 2018, 2:39 pm
டெல்லி: கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி, 2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil where are the jobs you promised manmohan singh asks pm narendra modi
மோடியின் கேடித்தனத்தை அவிழ்த்துவிட்ட மன்மோகன் சிங்!!


காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர், “மோடி 2014 தேர்தலில் போட்டியிட்ட போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.

அதில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை 2 லட்சம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சனை முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, மிகவும் மோசமாக உள்ளது. மோடி அரசு காஷ்மீர் பிரச்சனையில் தவறான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. இதனால் இந்திய எல்லையில் தினமும் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு சிக்கலாக்கி உள்ளது.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். இந்திய சுதந்திரத்தை முன்னெடுத்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியது காங்கிரஸ் கட்சி. இன்று அதேபோல், வளர்ச்சியையும் சமூக நீதியையும் முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி சவால்களை சந்தித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் மக்களின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை பாஜக முடக்கி விட்டதாகவும், காங்கிரஸ் கட்சியை அழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி