ஆப்நகரம்

கேரள ராணுவ வீரர் தற்கொலை தான் செய்துகொண்டார்: ராணுவம் திட்டவட்டம்

தனது உயர் அதிகாரிகளைக் குற்றம்சாட்டிய கேரள ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டுதான் இறந்தார் என்று ராணுவம் திட்டவட்டமாகக் கூறுகிறது.

TNN 4 Mar 2017, 2:46 pm
மும்பை: தனது உயர் அதிகாரிகளைக் குற்றம்சாட்டிய கேரள ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டுதான் இறந்தார் என்று ராணுவம் திட்டவட்டமாகக் கூறுகிறது
Samayam Tamil whistleblower jawan found dead army says he committed suicide
கேரள ராணுவ வீரர் தற்கொலை தான் செய்துகொண்டார்: ராணுவம் திட்டவட்டம்


ராணுவ உயர் அதிகாரிகளைக் குற்றம்சாட்டிப் பேசிய கேரள ராணுவ வீரர் ராய் மேத்யூ கடந்த 25ஆம் தேதி மாயமானார். அவரை சக ராணுவ வீரர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் மும்பையின் நாசிக்கில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மேத்யூ தூக்கில் தொங்கியவாறு பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ராணுவம், இறந்த கேரள ராணுவ வீரர் ராய் மேத்யூ தற்கொலை தான் செய்துகொண்டார் என்று கூறியுள்ளது.

இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் வீரர்களை தரக்குறைவாக நடத்துவது செய்தி நிறுவனம் ஒன்றின் ரகசிய ஆய்வில் தெரியவந்தது. அந்த ஆய்வில் செய்தி நிறுவனத்துக்கு தன் முகத்தை மறைத்துக்கொண்டு, ராய் மேத்யூ பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ராணுவ வீரர்களை உயர் அதிகாரிகள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற பணிகளைச் செய்ய வைப்பதாக புகார் கூறியிருந்தார்.

தான் தெரிவித்த கருத்து வெளியிடப்படாது என்ற உத்தரவாதத்தை நம்பி ராய் பேட்டி கொடுத்தார் என்றும் பேட்டி வெளியிடப்பட்டதால் ராணுவம் தன் மீது எடுக்கும் நடவடிக்கைகளை எண்ணி மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி