ஆப்நகரம்

அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்? சஸ்பென்ஸ் உடைக்கப் போகும் முதல்வர்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறவுள்ள நிலையில், யாருக்கெல்லாம் வாய்ப்பு என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 13 Jan 2021, 10:07 am
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் அணி மாறியதால் ஆட்சி கவிழ்ந்தது. இவர்கள் தற்போது பாஜக வசமுள்ள நிலையில், அமைச்சர் பதவி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.
Samayam Tamil Yediyurappa


இதற்காக கட்சி மேலிடத்தின் அனுமதிக்காக காத்திருந்த எடியூரப்பாவிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து தற்போது அனுமதி கிடைத்துள்ளது. மொத்தம் 7 அமைச்சரவை இடங்கள் காலியாக இருக்கின்றன. ஆனால் புதிதாக 8 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, ஒருவர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
யாருக்கெல்லாம் வாய்ப்பு?

* உமேஷ் வி கட்டி
* முருகேஷ் நிரானி
* எஸ் அங்காரா
* ஆர் சங்கர்
* சி பி யோகேஷ்வர்
* எம்.டி.பி நாகராஜ்
* அரவிந்த் லிம்பாவலி
* என் முனிரத்னா

வெளியேறும் அமைச்சர்

* ஹெச் நாகேஷ்

இதேபோல் ஹலப்ப ஆச்சார், அரவிந்த் பெல்லாட், நரசிம்ஹா நாயக், கே பூர்ணிமா ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவராக விளங்கும் நிரானி மற்றும் கடலோரப் பகுதிகளின் முக்கிய தலைவராக இருக்கும் எஸ்.அங்காராவிற்கும் இடம் கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டர் மாஸ், பிளாக்பஸ்டர், தெறி: ட்விட்டர் விமர்சனம்
மேலும் ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றியவராக கருதப்படும் சி.பி யோகேஸ்வருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் இதற்கு பாஜகவிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் காங்கிரஸின் டி.கே. சிவகுமார், மதச்சார்பற்ற ஹெச்.டி. குமாரசாமி ஆகியோருக்கு எதிராக வலுவான சக்தியாக யோகேஸ்வர் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இவருக்கு கட்டாயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று முதல்வர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா, அமைச்சரவை பட்டியல் இன்று தெரியவரும் என்று கூறினார். இந்த சூழலில் இன்று பிற்பகல் 3.50 மணியளவில் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அடுத்த செய்தி