ஆப்நகரம்

கொரோனா நிவாரணம்: ஏன் தனி கணக்கை மோடி தொடங்குகிறார்?

கொரோனா தடுப்பு நிவாரணத்திற்காக புதிதாக கணக்கும், அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது ஏன் என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Samayam Tamil 31 Mar 2020, 10:47 am
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Samayam Tamil கொரோனா நிவாரணம்


இதற்காக அரசுகள் நிதிகளை ஒதுக்கியுள்ள போதும் மக்கள் பங்களிப்பையும் கோரியுள்ளது. நிலைமை மோசமாகியுள்ள நிலையில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் முதல் பாமரர்கள், பள்ளிச் சிறுவர்கள் வரை பலரும் நிதியுதவி செய்துவருகின்றனர்.

மாநிலங்களில் முதலமைச்சர் நிவராண நிதிக்கும் மத்தியில் பிரதமர் நிவாரண நிதிக்கும் மக்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.

கொரோனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன?

இதில் பிரதமர் தேசிய நிவாரண நிதி ஏற்கெனவே உள்ள நிலையில் கொரோனா வைரஸ் நிதியுதவியைப் பெற புதிதாக ‘பிஎம் கேர்ஸ்’ என்ற புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரதமரும் மூன்று அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

பிரதமர் தேசிய நிவாரண நிதி 1948ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டு காலம் செயல்பாட்டில் இருக்கும் அதில் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி 3,800 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. அந்தத் தொகை அப்படியே இருக்க புதிதாக ஏன் ஒரு கணக்கும், அறக்கட்டளையும் தொடங்கப்பட வேண்டும் அதில் எதிர்கட்சியனர், குடிமை சமூக உறுப்பினர்கள் இல்லாதது ஏன் என கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் தேசிய நிவாரண நிதியை பிரதமர் கேர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டியதுதானே. வார்த்தைகளின் முதல் எழுத்தை தொகுத்துச் கவர்ச்சிக்காக சுருக்கமாக பெயர் வைப்பதில் பிரதமருக்கு பேரார்வம் அதிகம் இருக்கும் என்பதெல்லாம் சரிதான், ஆனால் எதற்காக புதிய நிதியம் தொடங்கப்பட வேண்டும், எதற்காகப் பொது அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும்? அதுவும் அதன் விதிமுறைகள் பற்றி வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது ஏன்? பிரதமரே நீங்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சசி தரூர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா நோய் தொற்று இருப்பதை கண்டறியும் ஆய்வகத்திற்காக செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி