ஆப்நகரம்

சட்டப்பிரிவு 370ஐ ஏன் நீக்கவில்லை? காங்கிரசை விளாசிய பிரதமர் மோடி!!

சட்டப்பிரிவு 370ஐ ஏன் நீக்கவில்லை? காங்கிரசை விளாசிய பிரதமர் மோடி!! பிரதமர் மோடி இன்று தனது 73வது சுதந்திர தின உரையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம், சட்டப்பிரிவு 370 ரத்து ஆகியவற்றை அதிகமாக பேசியதுடன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

Samayam Tamil 15 Aug 2019, 11:46 am
பிரதமர் மோடி இன்று 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''ஜம்மு காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை எங்களது அரசால் தற்போது நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, மக்களின் ஆசை நிறைவேற்றியுள்ளது.
Samayam Tamil Modi I day


சட்டப்பிரிவு 370 என்பது முக்கியமான ஒன்றாக இருந்து இருந்தால், ஏன் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது. மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்று அறிந்து இருந்தும் ஏன் நீக்கவில்லை. தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தவர்கள் இந்த தற்காலிக சட்டப்பிரிவை நீக்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை. நாங்கள் தற்போது சர்தார் வல்லபாய் படேலின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளோம். இந்த சட்டப்பிரிவு நீக்கபட்டதில் இருந்து அனைத்து வளர்ச்சிப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம். ஒரு நாள் கூட தாமதிக்கவில்லை. தற்போது ஒரு தேசம், ஒரு அரசியலமைப்பு சட்டம் என்பது அமல் செய்யப்பட்டு, நாடே கவுரவம் அடைந்துள்ளது.
PM Modi: நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசின் அதிரடிகள் இதோ; சுதந்திர தினத்தில் பிரதமர் உரை- முழு விவரம்...!

சட்டப்பிரிவு 370 இதுவரை ஊழல் மற்றும் சொந்த பந்தங்களுக்கு உதவுவது என்று சுயநல நோக்கத்திற்குத்தான் பயன்பட்டு வந்துள்ளது. அதேசமயம், பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, தலித் மக்களுக்கு, பழங்குடியினருக்கு அநீதி நடந்து வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி வாய்ப்பை அளித்துள்ளனர்'' என்றார்.
Independence Day 2019: இன்று 73வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார் பிரதமர் மோடி!

இவர் தனது பெரும்பாலான பேச்சில் முக்கியமாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார்.

அடுத்த செய்தி