ஆப்நகரம்

சோனியாவை மோடி பாதுகாப்பது ஏன்: கெஜ்ரிவால் கேள்வி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரதமர் மோடி பாதுகாப்பது ஏன் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindustan Times 7 May 2016, 2:01 pm
புதுதில்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரதமர் மோடி பாதுகாப்பது ஏன் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil why is narendra modi protecting sonia kejriwal
சோனியாவை மோடி பாதுகாப்பது ஏன்: கெஜ்ரிவால் கேள்வி


ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் பேசியதாவது: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. இதுபோன்ற விவகாரத்தை எங்களிடம் விட்டு விடுங்கள். எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும் என்பதை நாங்கள் காட்டுகிறோம்.

இத்தாலி நாட்டு அரசு விசாரணையை நடத்தி, லஞ்சம் கொடுத்த அந்நிறுவன அதிகாரிகளை சிறைக்கு அனுப்பியுள்ளது. ஆனால், நமது பிரதமரோ ஒரு இம்மி அளவு கூட இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரதமர் மோடி பாதுகாப்பது ஏன்? சோனியா மீது நடவடிககி எடுக்க பிரதமருக்கு தைரியம் இல்லை என்றார்.

அடுத்த செய்தி