ஆப்நகரம்

நாடாளுமன்றத்துக்குள் ஓடும் மத்திய அமைச்சர்... என்னவானது அவருக்கு!!

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நாடாளுமன்றத்துக்குள் ஓடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. எதற்காக இப்படி ஓடினார் என்று கேள்விப்பாட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

Samayam Tamil 5 Dec 2019, 12:02 pm
நாடாளுமன்றத்திற்குள் மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஓடுவது போன்ற புகைப்படம் டிவிட்டரில் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தி இருந்தது.
Samayam Tamil மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்


அனனைவருக்கும் ஏன் அவ்வாறு ஓடினார் என்ற கேள்வி அப்போது எழுந்தது. பின்னர்தான் தெரிந்தது, கேள்வி நேரத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிக்கு பயந்து அவ்வாறு ஓடினார் என்ற செய்தி வெளியானது.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, குறைந்த அளவில் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வதாக பிரதமர் மோடிக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, பிரதமர் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக செய்தி வெளியானது. ஆதலால், கேள்வி நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கடமையுணர்வுடன் பியுஷ் ஓடியுள்ளார்.
106 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நாடாளுமன்றம் செல்லும் ப.சிதம்பரம்... என்னவெல்லாம் பேசுவாரோ?

இந்தப் புகைப்படம் டிவிட்டரில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. ''தனது பணியைச் செய்யத்தானே அவ்வாறு ஓடினார்'' என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ''இதற்கு முன்பு மத்திய அமைச்சர்கள் யாரும் இதுமாதிரி ஓடிச் சென்று கேள்வி நேரத்தில் கலந்து கொண்டது இல்லை'' என்று சிலர் பதிவிட்டுள்ளனர். பலர் அவரது கடமை தவறாமையை பாராட்டியுள்ளனர்.
உருவானது புதிய புயல்: ஒரு வருசத்துல இத்தனை புயலா?

''மோடி அமைச்சரையில் அனைவரும் வேலையாட்கள்தான்...'' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
விண்ணில் செலுத்தப்பட தயாரானது பிஎஸ்எல்வி சி-48!
இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் அலுவலகத்துக்கு தவறாமல் காலை 9 மணிக்கு வந்துவிட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில் இருந்து அமைச்சர்கள் அனைவரும் அலுவகத்துக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்துக்குள் பியுஷ் கோயல் ஓடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி