ஆப்நகரம்

நீதிபதியின் குடும்பத்துக்கே இந்த நிலைமையா!!

டெல்லியில் ஓய்வு பெற்ற நீதிபதியின் மனைவி, மகளை வீட்டு அறையில் பூட்டு போட்டு விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2018, 6:43 pm
டெல்லியில் ஓய்வு பெற்ற நீதிபதியின் மனைவி, மகளை வீட்டு அறையில் பூட்டு போட்டு விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil arrest.


டெல்லியில் உள்ள நியூ ஃப்ரண்ட்ஸ் காலணியைச் சேர்ந்தவர் ரேபா கபூர்(75). இவருடைய கணவர் (ஓய்வு பெற்ற நீதிபதி) சில ஆண்டுகளுக்குமுன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து, ரேபா கபூர், தனது மகள் ஷிபி கபூர்(40) உடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு வீட்டு வேலை செய்வதற்காக சந்தீப் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதியின் வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த திங்களன்று காலை 11 மணியளவில், சந்தீப் தனது உள்ளூர் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு நீதிபதியின் வீட்டுக்குள் வந்தார். நிலைமையை அறிந்த நீதிபதியின் குடும்பத்தினர் சத்தம் போட முயற்சித்தனர். ஆனால், அதற்குள்ளாக கத்தியைக் காட்டி மிரட்டிய சந்தீப், சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று அடக்கினார். மேலும், இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர், நீதிபதியின் மனைவி மற்றும் மகள் இருவரையும் வீட்டில் தனியாக அறையில் அடைத்து வைத்து பூட்டியுள்ளார். மேலும், அவர்களது செல்போன்களையும் பறிமுதல் செய்து அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டுள்ளார்.

பின்னர், தனது நண்பர்கள் உதவியுடன் வீட்டிலிருந்த பணம், நகை, விலையுர்ந்த பொருட்களை சந்தீப் கொள்ளையடித்துச் சென்றார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நடந்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து, தப்பியோடிய கொள்ளையர்களில் இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அடுத்த செய்தி