ஆப்நகரம்

ரியல் குந்தவியாக மாறிய மனைவி... கணவனுக்கு முன்னாள் காதலியுடன் திருமணம்.. சில்லுனு ஒரு சம்பவம்

திருப்பதியில் கணவனுக்கு முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்துள்ள மனைவியின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2022, 5:22 pm
ஆந்திர மாநிலம் திருப்பதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக்டாக்கில் பிரபலமாக வளம் வந்துள்ளார். அப்போது கடப்பாவை சேர்ந்த விமலா என்ற பெண்ணை டிக்டாக்கில் பார்த்து காதலித்துள்ளார். காலப்போக்கில் இருவரும் காதலிக்க தொடங்கி பின்னர் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். இருவரும் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தனர்.
Samayam Tamil tirupati news


இந்நிலையில், திருமணத்துக்கு முன்பு கல்யாண் கடப்பாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் நித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து சில சிக்கல்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த விவகாரம் விமலாவுக்கு தெரியாது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நித்யஸ்ரீ கல்யாணை சந்திக்க திருப்பதிக்கு வந்துள்ளார். அப்போதுதான் கல்யாணுக்கு திருமணமான விவகாரம் தெரிந்துள்ளது.

அதற்கு பிறகும் நித்யஸ்ரீ கல்யாணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். மேலும் அதே கிராமத்தில் தங்கிய நித்யஸ்ரீ அவரது கோரிக்கையை விமலாவிடமும் சொல்லி சம்மதிக்குமாறு கெஞ்சியுள்ளார். கணவனின் முன்னாள் காதலின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட விமலா நித்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு தனது தலைமையிலேயே கணவனுக்கு நித்யாவை திருமணம் செய்து வைத்துள்ளார்.

மேலும், மூவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் என்று உத்தரவாதமும் எடுத்த எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துள்ளனர். இந்த திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை என்றாலும் மூன்று பேரின் ஒற்றை கருத்தினால் இந்த திருமணம் நடந்துள்ளது.

''சில்லுனு ஒரு காதல்'' படத்தில் கணவனின் உணர்வுகளை புரிந்து அவனது முன்னாள் காதலியை வரவழைத்து சந்திப்பை ஏற்படுத்தும் காட்சிகள் உருக்கமாக இருக்கும். ஆனால், நிஜ சம்பவத்தில் கணவனுக்கு அவனது முன்னாள் காதலியையே திருமணம் செய்து வைத்துள்ள மனைவியின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிக்டாக் செயலியால் பல குடும்பங்கள் நாசமான செய்திகள் வந்த நிலையில் அதே செயலியால் ஒரு கணவனுடன் இரண்டு பெண்கள் ஒற்றுமையாக வாழ நினைத்திருப்பது பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்த செய்தி