ஆப்நகரம்

நடனமாட மறுத்த மனைவியை கீழே தள்ளிய கணவர்

பாண்டா மாவட்டம் சில்லாகட் டவுன் பகுதியருகே திக்வாட் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாட மறுத்த மனைவியை கணவரே கீழே தள்ளிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 16 May 2017, 4:08 pm
கான்பூர்: பாண்டா மாவட்டம் சில்லாகட் டவுன் பகுதியருகே திக்வாட் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாட மறுத்த மனைவியை கணவரே கீழே தள்ளிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil wife refuses to dance hubby pushes her from rooftop
நடனமாட மறுத்த மனைவியை கீழே தள்ளிய கணவர்


உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஷாகா திவாரி(28) அவரது கணவர் அஜய், நடனமாடும்படி வலியுறுத்தியுள்ளார். இதற்கு மனைவி மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அஜய், விஷாகாவை கீழே தள்ளியுள்ளார்.

இதில் விஷாகாவின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், அவரது கை, வயிறு பகுதி பலத்த காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அஜய் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாண்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள விஷாகாவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை விஷாகாவின் கணவர் அஜய் கைது செய்யப்படவில்லை.

A man allegedly pushed his wife down from the roof of a house in an inebriated state when she refused to dance with him during a marriage function in Dighwat village of Chillaghat town in Banda district on Saturday night.

அடுத்த செய்தி