ஆப்நகரம்

இனி சண்ட பெருசா இருக்கும்; ஆர்.எஸ்.எஸ், பாஜகவை விட மாட்டேன் - ராகுல் காந்தி ஆவேசம்!

கடந்த 5 ஆண்டுகளில் போராடியதை விட, இனிமேல் 10 மடங்கு வீரியத்துடன் தனது போராட்டம் இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Jul 2019, 4:10 pm
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட மன வருத்ததை ஒட்டி, தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
Samayam Tamil Rahul


இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த சூழலில் நேற்று டுவிட்டர் மூலம் அறிக்கை வெளியிட்டு, தனது ராஜினாமாவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அதிரடியாக தெரிவித்தார்.

உடனே காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டி, புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். அதாவது, பாஜக, ஆர்.எஸ்.எஸ் சித்தாங்களுக்கு எதிராக செயல்பட்டால், அவர்கள் தாக்கப்படுவார்கள். அழுத்தப்படுவார்கள். கொல்லப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த துர்திமான் ஜோஷி மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.15,000 செலுத்தி பிணையில் ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு எதிராக போரிட்டேன்.

அதைவிட 10 மடங்கு வீரியத்துடன் இனி போராடுவேன். அவர்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி