ஆப்நகரம்

புதிதாக 50,000 அரசு வேலைவாய்ப்புகள், மூன்றே மாதங்களில் நிரப்பப்படும்- ஆளுநர் சத்யபால் மாலிக்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, அரசு பணிகள் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Aug 2019, 8:45 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த சிறப்பு அந்தஸ்து, மத்திய அரசால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது.
Samayam Tamil Satyapal Malik


இதையொட்டி ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டது. முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு, காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் என்று தெரிவித்தது.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், குப்வாரா மற்றும் ஹந்த்வாரா மாவட்டங்களில் மொபைல் போன் இணைப்பை திறந்து வைத்துள்ளோம்.

ஐமுகூ-2 சறுக்கலுக்கு இவர் தான் காரணம்- பகிரங்கமாக போட்டு உடைத்த வீரப்ப மொய்லி!

படிப்படியாக பிற மாவட்டங்களிலும் தகவல் தொடர்பு வசதிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு காஷ்மீரியின் உயிரும் மதிப்பு மிக்கது. இனி ஒரு உயிர் கூட பறிபோய் விடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்.

வன்முறை சம்பவங்களால் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களும் இடுப்பு கீழே மட்டும் காயம்பட்டிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தில் புதிதாக 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் முழு உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுங்கள்.

சிதம்பரத்தை நாளை காலை வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை!!

இந்தப் பணியிடங்கள் இன்னும் 3 மாதங்களில் நிரப்பப்படும். போன், இண்டர்நெட் வசதிகள் பயன்படுத்தப்படுவது குறைந்துள்ளது. ஏனெனில் பயங்கரவாதிகளும், பாகிஸ்தானியர்களும் தவறாக பயன்படுத்தக் கூடும். இதற்காகவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக முழு பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி