ஆப்நகரம்

சிஏஏ விவகாரத்தில் சரவெடியாய் வெடித்து தள்ளும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் எதிர்ப்பையும் மீறி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சர் நாராயணசாமி அசத்தியிருக்கிறார்.

Samayam Tamil 12 Feb 2020, 2:53 pm
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரள சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Samayam Tamil Narayanasamy


இதையடுத்து மேலும் சில மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பை காட்டின. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று கூடிய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முதலமைச்சர் நாராயணசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இன்னொரு தடவை ப்ளீஸ்; பயத்தில் நடுங்கும் தெலங்கானா - வைரஸை விட வேகமாக பரவும் புரளி!

இதற்கு பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியை கலைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

ஏட்டிக்கு போட்டியாய் செய்யும் பாஜக; நீங்க 10 ரூபாய்னா, நாங்க ரூ.30 ரூபா - வயிறு நிறையுமா...?

ஆனால் ஒருபோதும் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம். இந்த சட்டத்தால் பாஜகவை மக்கள் எதிர்த்துள்ளனர் என்பதை டெல்லி தேர்தல் காட்டுகிறது.

ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 147 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் நாங்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி