ஆப்நகரம்

நாடாளுமன்றத்துக்கு லீவா போட்றீங்க; 2019ல் ஆப்பு காத்திருக்கு: பாஜக எம்.பிக்களை எச்சரித்த மோடி...!

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிக அளவில் விடுப்பு எடுக்கும் பாஜக எம்.பிக்களை வரும் 2019ல் கவனித்து கொள்ள இருப்பதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

TNN 11 Aug 2017, 9:05 am
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிக அளவில் விடுப்பு எடுக்கும் பாஜக எம்.பிக்களை வரும் 2019ல் கவனித்து கொள்ள இருப்பதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
Samayam Tamil will take action in 2019 says pm to absentee mps
நாடாளுமன்றத்துக்கு லீவா போட்றீங்க; 2019ல் ஆப்பு காத்திருக்கு: பாஜக எம்.பிக்களை எச்சரித்த மோடி...!


மாநிலங்களவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, பாஜக எம்.பிக்கள் சிலர் வருகை புரியவில்லை. இதனால் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படவில்லை.

மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் வைக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு 31 பாஜக எம்.பிக்களும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களும் விடுப்பு எடுத்ததே காரணம்.

இதுதொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், நீங்கள் உங்க விருப்பப்படி செயல்படுங்கள்; நான் என் விருப்பப்படி 2019ல் நடந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு தன்னை யாரும் திட்டக் கூடாது என்றும் தெரிவித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் சிறப்பான செயல்பாடு ரீதியாக மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் விரைவில் மாநிலங்களவைக்கு வருகை புரிய உள்ள நிலையில், எம்.பிக்களின் விடுப்பு முடிவுக்கு வரும் என்று நம்புவதாக மோடி கூறினார்.

Will take action in 2019 says PM to absentee MPs.

அடுத்த செய்தி