ஆப்நகரம்

ஆபாச பட விவகாரம் - சிக்குனா அவ்வளவு தான்; களையெடுக்க தயாரான மத்திய அரசு!

ஆபாச படங்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Feb 2020, 10:36 am
கடந்த ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் 2020 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கல்யாண் பானர்ஜி கேள்வி ஒன்றை எழுப்பினார்.
Samayam Tamil Ravi Shankar Prasad


இவர் மேற்குவங்க மாநிலம் செராம்போர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார். அதாவது, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரவுவது, குழந்தைகள் ஆபாசப்படம் உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும்.

கொதிக்க வைத்த பூண்டு தண்ணீரை குடித்தால் கொரோனா பாதிப்பு சரியாகிவிடுமா- உண்மை என்ன...?

இதற்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேருக்கு தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன? ஆகிய விவரங்களை கேட்டார்.

இதற்கு பதிலளித்த தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ஆபாச படங்கள், குழந்தைகள் ஆபாச படங்கள் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதற்காக மாநில போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுதல், குழந்தைகள் ஆபாச படம் போன்ற விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராமர் கோயில் எப்போது கட்டப்படும்?- இப்படியொரு ஹேப்பி நியூஸ் சொன்ன பிரதமர் மோடி!

இந்த அபாயத்தை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சமூக பிரச்சினைகளை ஒழிக்க நாடாளுமன்றமும், நாட்டு மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி