கர்நாடக மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளும் தரப்பைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
ஆனால் அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு உத்தரவிட்டது.
எங்க கிட்ட பலம் இருக்கு; நான் எதுக்கு பதவி விலகணும்- பல்டி அடித்த முதல்வர் குமாரசாமி!
அவ்வாறு செய்த பின்னும், ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்த சூழலில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது உள்நோக்கம் உடையதாக இருக்கிறது.
அவர்கள் மீது ஏற்கனவே சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தகுதி இழப்பிற்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். சபாநாயகரை யாரும் நிர்பந்திக்க முடியாது என்று கூறினார்.
நீதிமன்றம் எனக்கு அறிவுறுத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சபாநாயகர் தடாலடி!
பின்னர் எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ராஜினாமா விஷயத்திற்கும் சபாநாயகர் அதிகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை ரஞ்சன் கோகாய், கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சபாநாயகர் எண்ணுகிறாரா. எப்படி அவ்வாறு நீதிமன்றம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
தனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி? கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்!
பின்னர் வாதிட்ட முகுல் ரோஹத்கி, எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கோரினார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு உத்தரவிட்டது.
எங்க கிட்ட பலம் இருக்கு; நான் எதுக்கு பதவி விலகணும்- பல்டி அடித்த முதல்வர் குமாரசாமி!
அவ்வாறு செய்த பின்னும், ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்த சூழலில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது உள்நோக்கம் உடையதாக இருக்கிறது.
அவர்கள் மீது ஏற்கனவே சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தகுதி இழப்பிற்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். சபாநாயகரை யாரும் நிர்பந்திக்க முடியாது என்று கூறினார்.
நீதிமன்றம் எனக்கு அறிவுறுத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சபாநாயகர் தடாலடி!
பின்னர் எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ராஜினாமா விஷயத்திற்கும் சபாநாயகர் அதிகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை ரஞ்சன் கோகாய், கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சபாநாயகர் எண்ணுகிறாரா. எப்படி அவ்வாறு நீதிமன்றம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
தனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி? கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்!
பின்னர் வாதிட்ட முகுல் ரோஹத்கி, எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கோரினார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.