ஆப்நகரம்

எடியூரப்பா பதவி விலகுவது உறுதி – காங்கிரஸ் நம்பிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா பதவி விலகுவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியினா் நம்பிக்கை தொிவித்துள்ளனா்.

Samayam Tamil 19 May 2018, 3:13 pm
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா பதவி விலகுவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியினா் நம்பிக்கை தொிவித்துள்ளனா்.
Samayam Tamil 4


கா்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா மாலை 4 மணிக்கு தனது அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளாா். பெரும்பான்மைக்கு தேவையான சட்டமன்ற உறுப்பினா்கள் பா.ஜ.க. வசம் இல்லை என்று காங்கிரஸ், மஜத கட்சி உறுப்பினா்கள் தொிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 193 சட்டமன்ற உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா் என்றும், இதில் ஆனந்த் சிங், பிரதாப் கௌடா உள்ளிட்டோா் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடா்ந்து தனியா்ா விடுதியில் தங்கியிருந்த இரண்டு காங்கிரஸ் கட்சியினரும் அங்கிருந்து மீட்டு சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் செய்தியாளா்களிடம் பேசுகையில், எடியூரப்பாவிற்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே அவா் பதவியேற்புக்கு முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்வாா் என்றும் தகவல் தொிவித்து வருகின்றனா். மேலும் இது தொடா்பாக கன்னட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அடுத்த செய்தி