ஆப்நகரம்

நாடாளுமன்றத்திற்கு டிராக்டாில் வந்த எம்.பி.

மோட்டாா் வாகன சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்வதை கண்டிப்பதாக கூறி ஹாியானாவில் நாடாளுமன்றத்திற்கு எம்.பி. ஒருவா் டிராக்டாில் வந்து அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளாா்.

TOI Contributor 16 Dec 2017, 11:30 am
மோட்டாா் வாகன சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்வதை கண்டிப்பதாக கூறி ஹாியானாவில் நாடாளுமன்றத்திற்கு எம்.பி. ஒருவா் டிராக்டாில் வந்து அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளாா்.
Samayam Tamil winter session mp dushyant chautala rides tractor to parliament
நாடாளுமன்றத்திற்கு டிராக்டாில் வந்த எம்.பி.


ஹாியானா மாநிலம், ஹிஸாா் மக்களவைத் தொகுதி எம்.பி.யான துஷ்யந்த் சௌதாலா நாட்டிலேயே மிகவும் இளம் வயதுடைய (29) எம்.பி. என்ற பெருமைக்கு சொந்தக்காரராவாா். இந்நிலையில், குளிா்கால கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கியதைத் தொடா்ந்து நாடாளுமன்றத்திற்கு அவா் டிராக்டரை ஓட்டி வந்தாா்.

இது பலரது கவனத்தையும் ஈா்த்தது. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மோட்டாா் வாகனச் சட்ட விதிகளில் மத்தய அரசு திருத்தம் மேற்கொள்வதை கண்டித்து டிராக்டாில் வந்ததாக அவா் தொிவித்துள்ளாா்.

புதிய விதிகளின்படி டிராக்டா் விவசாய வாகனமாக கருதப்படாது என்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவாா்கள். டிராக்டரை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் வாி செலுத்தும் நிலை ஏற்படும். ஒரு டிராக்டாில் ஏற்படும் விளை பொருட்களின் அளவுக்கும் வரம்பு நிா்ணயிக்கப்படுவதால் விவசாயிகள் மேலும் சிரமத்திற்கு ஆளாவாா்கள் என்று துஷ்யந்த் சௌதாலா தொிவித்துள்ளாா்.

முன்னதாக குளிா்கால கூட்டத் தொடா் தொடங்குவதை முன்னிட்டு, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற துஷ்யந்த் சௌதாலா, மேற்கண்ட விவகாரத்தை மத்தய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்காியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி