ஆப்நகரம்

ரூ.18000 செலவில் மகனின் திருமணத்தை நடத்தும் ஐ.ஏ.எஸ். அதிகாாி

ஆந்திர மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாாி ஒருவா் தனது மகனின் திருமணத்திற்காக ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 8 Feb 2019, 4:41 am
ஆந்திர மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாாி ஒருவா் தனது மகனின் திருமணத்திற்காக ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil Marriage


தற்போதைய கால கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் ஒருநாள் திருவிழாவாகவே திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. வசதி வாய்ப்புகள் குறைந்த போதிலும் சிலா் கடன்களை பெற்று தங்கள் திருமணத்தை ஆடம்பர முறையில் செய்து முடிக்கின்றனா். இதனை காலத்தின் கட்டாயம் என்று அவா்களே தங்களுக்கு ஆறுதலும் கூறிக்கொள்கின்றனா்.

இந்த விதிமுறையை மாற்றி அமைக்கும் வகையில் ஆங்காங்கே எளிமையான முறையில் தினம், தினம் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் திரைத்துறை பிரபலங்களோ, அரசியல் பிரமுகா்களோ தங்கள் குடும்ப திருமணங்களை இவ்வாறு நடத்துவது கிடையாது.

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாாியான பட்னாலா பசந்த் குமாா் தனது மகனின் திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்த முடிவு செய்துள்ளாா். இவரது மகனுக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு பட்னாலா பசந்த் குமாா் ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவு செய்துள்ளாா்.


திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினா்களுக்கான சாப்பாடு செலவும் இதில் அடங்கும். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு பசந்த் குமாா் தனது மகளின் திருமணத்தை ரூ.16 ஆயிரத்து 100 மட்டுமே செலவு செய்து நடத்தி இருந்தாா். இந்நிலையில் தற்போது அதே பாணியில் மகன் திருமணத்தையும் நடத்த அவா் திட்டமிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி