ஆப்நகரம்

ஊரடங்கு மட்டும் இல்லைனா இந்தியாவின் கதி? கொரோனா பற்றி ’ஷாக்’ ரிப்போர்ட்!

குறித்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வில்லை எனில் இந்தியாவின் நிலை எத்தகைய விபரீதத்தை சந்தித்திருக்கும் என்று இங்கே அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 12 Apr 2020, 10:37 am
உலகின் பெரும்பாலான நாடுகளில் மிக மோசமான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவில் பாதிப்பு ஏற்படத் தொடங்கினாலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பலி எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் இதுவரை 289 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இருப்பினும் சரியான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டதால் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து இந்தியா தப்பித்துக் கொண்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Samayam Tamil இந்தியாவில் ஊரடங்கு


இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், இந்தியாவில் ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 8.2 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதாவது ஒட்டுமொத்தமாக 41 சதவீத அளவிற்கு வைரஸ் பரவலின் வளர்ச்சி விகிதம் இருந்திருக்கும் என்று அதிர்ச்சிகர தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது புள்ளியியல் பகுப்பாய்வு மட்டுமே. எந்தவொரு ஆய்வின் முடிவுகளும் அல்ல என்று தெரிவித்துள்ளது.

கோவிட்-19ஆல் காணாமல் போன பெருமை; வைரஸால் நடுங்கிக் கிடக்கும் தூய்மை நகரம்!

இதனை உறுதி செய்யும் வகையில் பேசிய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லவ் அகர்வால், இது ஊரடங்கு அமலுக்கு வரவில்லை எனில் ஏற்பட்டிருக்கும் விபரீதத்தை எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது. இதுவொரு கணக்கீடு மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட கணக்கீட்டின் படி ஊரடங்கு அமலுக்கு வராமல் தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுத்திருந்தால் ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 1.2 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கக் கூடும். வைரஸ் பரவலின் வளர்ச்சி விகிதம் 28.9 சதவீதமாக இருந்திருக்கும்.

ஒருவேளை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்திருந்தால் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று 2 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுத்திருந்தால் இதே நாளில் 44 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பர் என்று தெரியவந்துள்ளது.

மீண்டு வந்த பில்வாரா; கொரோனாவை எப்படி இந்தளவிற்கு கட்டுப்படுத்தியது?

எனவே மத்திய அரசு சரியான நேரத்தில் எடுத்த ஊரடங்கு உத்தரவால் குறைந்த அளவாக 7,447 பேருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சரீர விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி அகர்வால் எடுத்துரைத்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சூழ்நிலைக்கு ஏற்ப மேம்பட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி