ஆப்நகரம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

புதுச்சேரியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம் நடத்திய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PTI 15 May 2017, 11:52 am
புதுச்சேரி: புதுச்சேரியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம் நடத்திய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil woman and her lover held for murdering her husband
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது


மேற்குவங்கத்தைச் சேர்ந்த விவேக் பிரசாத் எனும் தொழிலதிபர், கடந்த ஓராண்டாக புதுச்சேரியில் தங்கி விழுப்புரம் அருகே பூத்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவரிடம் விழுப்புரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். பாபுவுக்கும், விவேக்கின் மனைவி ஜெயந்திக்கும் இடையே நட்பு உண்டாகி அது காதலாக மாறியது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விவேக் பிரசாத்தை காணவில்லை என அவரது மனைவி ஜெயந்தி, ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயந்தியின் புகாரை ஏற்று விசாரணை நடத்திய காவல்துறையினர், குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள செப்டிக் டேங்கில் விவேக்கின் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து தலைமறைவான விவேக்கின் உதவியாளர் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தியதில், இந்த கொலை சம்பவத்தில் விவேக்கின் மனைவிக்கு தொடர்பிருப்பதாகவும், அவர் தான் இந்த கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயந்தியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாபு - ஜெயந்தி இடையே தகாத உறவு இருப்பதை அறிந்த விவேக் மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து அவர்கள் விவேக்கை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து, இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து உடலை புதைத்து, காவல்துறையை ஏமாற்ற நாடமாடியது அம்பலமானது. தற்போது, இருவரும் மீதும் திட்டமிட்ட கொலை பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

A woman along with her paramour has been arrested here for allegedly killing her businessman husband on May 1, police said today.

அடுத்த செய்தி